Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந்தேதி ஒத்துழைப்பு இல்லாததாலும், வீடு, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் 4 இடங்களிலும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட 4 இடங்களிலும் நீதிமன்ற அனுமதி பெற்று பூட்டை உடைத்து சோதனை நடைபெறுகிறது.
சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் வீட்டில் சோதனை. ஆயிரம் விளக்கில் உள்ள நண்பர் சந்திரசேகரின் சாஸன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை
சென்னை அண்ணாநகரில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் முருகன் வீட்டில் சோதனை. சேலம் தரண் மருத்துவமனையின் மருத்துவர் செல்வராஜா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.